சிவகங்கையில் மகனை கொன்ற தந்தை உடல்நலக் குறைவால் உயிரிழப்பு..!!

சிவகங்கை: மது போதையில் தொந்தரவு செய்த மகன் சுப்பிரமணியை கொலை செய்த ராமசாமி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். ஓய்வு பெற்ற வேளாண்துறை ஊழியர் ராமசாமி வயது முதிர்வு, உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 1-ம் தேதி போதையில் தகராறு செய்த தனது மகன் சுப்ரமணியை கொலை செய்த ராமசாமி கைது செய்யப்பட்டார். கைதான ராமசாமி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

Related posts

பெண்களின் ஆரோக்கியத்தில் பெரும்பங்காற்றும் பூசணி விதை!

தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை; கோமுகி அணை வறண்டதால் கேள்விக்குறியான சம்பா சாகுபடி: விவசாயிகள் கவலை