இந்நிலையில் நேற்று இரவு கூட்டுறவு வங்கிக்குள் நள்ளிரவில் சிசிடிவி இணைப்பை துண்டித்து மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். கொள்ளையடிக்க முயற்சித்தபோது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். மர்மநபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டதால் கீழக்கண்டனை கூட்டுறவு வங்கியில் இருந்த 4 கிலோ தங்க நகைகள் தப்பின. கூட்டுறவு வங்கியில் நடந்த கொள்ளை முயற்சி தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.