சிவகங்கையில் இன்று மின்தடை

சிவகங்கை, ஆக.29: பராமரிப்பு பணியால் சிவகங்கையில் இன்று மின் தடை செய்யப்பட உள்ளது.சிவகங்கை நகர் பகுதி மின் பகிர்மான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் சிவகங்கை நகரில் மேலூர் ரோடு, ராம் நகர், கொட்டகுடி, லெட்சுமணன் நகர், பொதிகை நகர், ராமசாமி நகர், மீனாட்சி நகர், பெருமாள் கோவில் தெரு, சத்தியமூர்த்தி தெரு, பாரதி நகர், மதுரை, முக்கு, நெல்மண்டித்தெரு, நேரு பஜார், மருத்துவக்கல்லூரி பகுதி, இந்திரா நகர் கிழக்கு, மேற்கு, பஸ் ஸ்டாண்ட் பகுதி, ஆதம் பள்ளி வாசல், நகராட்சி, யூனியன் அலுவலக பகுதி, பிள்ளை வயல் காளி கோவில் பகுதி, போஸ் ரோடு ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இவ்வாறு சிவகங்கை மின் பகிர்மான செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை