சிவகங்கை: திருப்பாச்சேத்தி வடக்கு பகுதியில் மின் கசிவு காரணமாகக் கரும்பு தோட்டத்தில் தீ பற்றி எரிந்தது. 3 மணி நேரமாக கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். 500 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த கரும்புகள் தீயில் எரிந்து நாசமாகியது.