ஆனால், நான்கு மாநிலங்களை கடந்து செல்ல வேண்டிய இருப்பதால் சுங்க கட்டணம் மட்டுமே ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை ஆகிறது. இதனுடன் லாரி வாடகை சேர்த்து ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது என்றும் வெளிமாநில வியாபாரிகள் விலை குறைவான கர்நாடகா, கேரளா தேங்காய்களை வாங்குவதால் திருப்புவனத்தில் தேங்காய்கள் லட்சக்கணக்கில் தேங்கி கிடக்கின்றன என்றும் விவசாயிகள் கூறியுள்ளன. சுங்கச்சாவடி கட்டணத்தில் தேங்காய் லாரிகளுக்கு சலுகை வழங்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளன.