சிவகங்கை: திருப்பத்தூர் தென்மாபட்டு வேலாயுதசுவாமி கோயில் மடத்தில் கள்ளசாவி மூலம் பெட்டகத்தை திறந்து திருடியுள்ளனர். ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள், ரூ.50,000 ரொக்கம், சொத்துகளின் அசல் ஆவணங்கள் திருட்டு போனது. வருமானம் அதிகரித்துள்ள நிலையில் கோயில், மடம், சங்கத்தை ஆர்.எஸ்.எஸ்., பாஜக பிரமுகர்கள் அபகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.