சீதாராம் யெச்சூரி உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி: சீதாராம் யெச்சூரி உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி(72) நிமோனியா பாதிப்பால் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை கட்சியின் தலைமையகத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு ஏராளமான அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பிறகு சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்