டெல்லி: நமது நாட்டைப் பற்றிய ஆழமான புரிதல் உள்ள மிகச்சிறந்த பாதுகாவலர் சீதாராம் யெச்சூரி என அவரது மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சித்தாந்தத்தை பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் யெச்சூரி. யெச்சூரியை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.