சீதாராம் யெச்சூரி மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சீதாராம் யெச்சூரி மறைவு தேசிய அரசியலுக்கு பெரும் இழப்பு என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். பொதுவாழ்வில் சீதாராம் யெச்சூரி ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவு கூரப்படும் என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். சீதாராம் யெச்சூரியின் மறைவு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே பேரிழப்பு என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Related posts

ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் மூழ்கி பலி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை

குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி