2 சகோதரிகள் சுட்டுக் கொலை: டெல்லியில் இன்று அதிகாலை பயங்கரம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் ஆர்.கே.புரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அம்பேத்கர் குடியிருப்பு பகுதியில் பிங்கி (30), அவரது சகோதரி ஜோதி (29) குடும்பத்தினர் வசித்து வந்தனர். இன்று அதிகாலை 4.40 மணியளவில் மேற்கண்ட சகோதரிகளின் சகோதரனை தேடி அவர்களது வீட்டிற்கு சிலர் வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த சகோதரிகள் பிங்கி, ஜோதி ஆகிய இருவரையும் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட்டனர். தகவலறிந்த போலீசார், இரு பெண்களின் சடலத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வெளியிட்ட பதிவில், ‘டெல்லி மக்கள் மிகவும் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருகின்றனர். டெல்லியின் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டியவர்கள், சட்டம் ஒழுங்கை சரி செய்யாமல், டெல்லி அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்’ என்று கூறியுள்ளார்.

Related posts

புதுவண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையின்போது தகரம் விழுந்து 3 பேர் காயம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,080க்கு விற்பனை

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்