15 வயது மைத்துனியை கடத்தி பாலியல் பலாத்காரம்: கூலி தொழிலாளி கைது

பள்ளிகொண்டா: வேலூர் மாவட்டம், குடியாத்தம் இந்திரா நகர் சர்ச் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். மனைவியின் சித்தி (சின்ன மாமியார்) பள்ளிகொண்டா அருகே உள்ள செங்கல் சூளையில் வேலை செய்கிறார். அவருடன் வெங்கடேசனும் வேலை செய்கிறார். இதனால் அங்குள்ள ஒரு வீட்டில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கினார்.

இந்நிலையில், தனது சின்ன மாமியாரின் 15 வயது மகளை அடைய வேண்டும் என்று ஆசையில் நெருங்கி பழகினார் வெங்கடேசன். அதற்கு சிறுமி மறுத்துள்ளார். கடந்த 19ம்தேதி கடைக்கு சென்ற சிறுமி, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வெங்கடேசனையும் காணவில்லை. சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர், பள்ளிகொண்டா போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கூத்தம்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் சிறுமியுடன் வெங்கடேசன் நின்றிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது சிறுமியை வெங்கடேசன் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை, போக்சோ சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related posts

பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாயிலும் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும்: ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை