இது சிறுமியின் அண்ணனுக்கு தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை மிரட்டிய நண்பர்கள் இருவரும் மது அருந்திவிட்டு அடிக்கடி தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். பெற்றோர் வீட்டில் இல்லாத சமயங்களில் தங்கையிடம் வீட்டிலேயே அண்ணனும் தகாத முறையில் பலமுறை நடந்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பம் ஆனார். சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கண்ட பெற்றோர் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது அண்ணனும், நண்பனும்தான் காரணம் என கூறியுள்ளார். இதுபற்றி மருத்துவமனை தரப்பில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, சிறுவர்கள் இருவரையும் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து, திருப்பூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் 2 சிறுவர்களும் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமி, தேவையான மருத்துவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னர் மகளிர் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.