அதனைத்தொடர்ந்து, சிறுகளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கெலடிப்பேட்டை ரேஷன் கடையில் அப்பகுதி பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரண நிதி வழங்கும் பணி நேற்று நடைபெற்றது. இதில், மொத்தம் உள்ள 1218 குடும்ப அட்டைதாரர்களில் வெள்ள நிவாரண உதவி பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று 1205 குடும்ப அட்டைதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில், நேற்று பிற்பகல் வரை மொத்தம் 466 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் அடிப்படையில், ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது. அதனை அப்பகுதி பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். இந்த, வெள்ள நிவாரண நிதி வழங்கும் பணியில் சிறுகளத்தூர் ஊராட்சி அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.