சீறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம் துவக்கம்

 

ஈரோடு, ஏப். 25: ஈரோட்டில் தமிழ்நாடு சீறார் எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் ஈரோடு கிளை துவக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு எழுத்தாளர் சங்கர் தலைமை தாங்கினார். எழுத்தாளர் உதயசங்கர் மொழிப்பெயர்ப்பு புத்தகமான வானம் பதிப்பகம் வெளியிட்ட வெல்வெட் முயல் என்ற புத்தகத்தை ஈரோடு சர்மிளா வெளியிட, நூலகர் ஷீலா பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், எழுத்தாளர்களின் கதைகளை சொல்லி சீறார் எழுத்தாளர்களை ஊக்குவித்தனர். இந்த சங்கத்தின் தலைவராக சங்கீதா, துணை தலைவராக எழுத்தாளர் ஷர்மிளா, செயலாளராக சரிதா, துணை செயலாளராக கலைவாணி, பொருளாளராக பாபு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து சீறார்கள் கதை சொல்லுதலும், நாடகமும், பாடலும் நடந்தது. முன்னதாக நூலகர் ஷீலா, கிளை தலைவர் சங்கீதா நன்றி கூறினார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை