சிங்கபெருமாள் கோவில் பகுதியில் வேன் மோதி ஒருவர் பலி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த பாரேரி சத்யா நகர் திருத்தேரி பகுதியை சேர்ந்தவர் துலுக்கானம் (48). இவர் நேற்று திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற வேன் மோதியதில் இதில், பலத்த காயமடைந்த துலுக்கானத்தை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துலுக்கானம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர். மேலும், விபத்து குறித்து டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை