Sunday, October 6, 2024
Home » சிங்கபெருமாள் கோவில் பகுதியில் வேன் மோதி ஒருவர் பலி

சிங்கபெருமாள் கோவில் பகுதியில் வேன் மோதி ஒருவர் பலி

by Karthik Yash

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த பாரேரி சத்யா நகர் திருத்தேரி பகுதியை சேர்ந்தவர் துலுக்கானம் (48). இவர் நேற்று திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற வேன் மோதியதில் இதில், பலத்த காயமடைந்த துலுக்கானத்தை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துலுக்கானம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர். மேலும், விபத்து குறித்து டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

eleven − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi