அப்போது வயலில் இறங்கி ஒற்றை யானை அட்டகாசம் செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் யானை, வனப்பகுதிக்குள் சென்றது. இந்த யானை மீண்டும் கிராமத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படும் என்பதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் யானை மீண்டும் ஊருக்குள் நுழையாதபடி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். யானையால் சேதமடைந்த பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.யானை நடமாட்டம் காரணமாக அப்பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.