சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் போட்டி இன்று தொடங்குகிறது. அதில் இந்திய வீரர்கள் எச்.எஸ்.பிரணாய், கிடாம்பி ஸ்ரீகாந்த், லக்ஷயா சென், பிரியான்ஷூ ராஜ்வத், வீராங்கனைகள் பி.வி.சிந்து, ஆகர்ஷி காஷ்யப் ஆகியோர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கின்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ்/சிராக் ஷெட்டி, கிருஷ்ண பிரசாத்/சாய் பாதீக், பெண்கள் இரட்டையர் பிரிவில் தனிஷா கிறிஸ்டோ/அஸ்வினி பொன்னப்பா, ருத்பாமா பாண்டா/ஸ்வேத்பர்னா பாண்டா, சிம்ரன் சிங்கி/ரித்திகா தாகர் களமிறங்குகின்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் சுமீத் ரெட்டி/சிக்கி ரெட்டி, அஷித் சூர்யா/அம்ருதா பிரமுதேஷ், சதீஷ்குமார் கருணாகரன்/ஆத்யா வரியத், வெங்கட் கவுரவ்/ஜூஹி தேவங்கன் பங்கேற்கின்றனர்.