Tuesday, September 17, 2024
Home » சிங்கப்பூரில் நீர்முனை தோட்டங்களை பார்வையிட்டு அதன் சிறப்பம்சங்கள் குறித்து கேட்டறிந்தார் அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம்

சிங்கப்பூரில் நீர்முனை தோட்டங்களை பார்வையிட்டு அதன் சிறப்பம்சங்கள் குறித்து கேட்டறிந்தார் அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம்

by Arun Kumar

சிங்கப்பூர்: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள். இன்று (30.07.2024) சிங்கப்பூர் நகரில் மெரினா நீர்த்தேக்கத்தை ஒட்டி 260 ஏக்கரில் அமைந்துள்ள “தி கார்டன்ஸ் பை தி பே “என்ற பூங்காவிற்கு வருகை புரிந்தார்.

இந்த பூங்காவில் உள்ள மூன்று நீர்முனை தோட்டங்களான மெரினா தெற்கில் உள்ள பே சவுத் கார்டன். மெரினா கிழக்கில் நிறுவனர்களின் நினைவகத்துடன் கூடிய பே ஈஸ்ட் கார்டன் மற்றும் டவுன் கோர் மற்றும் கல்லாங்கில் அமைந்துள்ள டே செண்ட்ரல் கார்டன் ஆகியவற்றிற்கு வருகை புரிந்து அதன் சிறப்பம்சங்களை அங்குள்ள அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், 130 ஏக்கர் பரப்பளவில் உள்ள பே சவுத் கார்டனில் அமைந்துள்ள மலர் குவி மாடமான உலகின் மிகப்பெரிய கண்ணாடி பசுமை இல்லத்தையும் பார்வையிட்டார். இப்பூங்காவின் சிறப்பம்சங்கள் ஆன கன்சர்வேட்டர்கள், நிலையான கட்டிட தொழில்நுட்பங்கள், ஆற்றல் திறன் உள்ள தோட்டங்களுக்குள் அமைந்துள்ள வானிலை கல்விக்கான அறிவியல் விரிவாக்க மையத்தினையும் பார்வையிட்டார்.

தமிழ்நாட்டிலுள்ள நகரங்களில் பசுமையான சூழல் மற்றும் தாவர இனங்களை மேம்படுத்துவதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டத்தினை செயல்படுத்த இந்த பயணம் உறுதுணையாக அமையும் எனவும், மேற்கண்ட பயணத்தின் சிறப்பம்சங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்து உரிய அனுமதி பெற்று தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் எனவும் தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, தமிழ்நாடு அரசு வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, கார்டன்ஸ் பை த பே பூங்காவின் மூத்த இயக்குநர் தினேஷ் நாயுடு அவர்களும் மற்றும் அலுவலர் செல்வி வன்ரூ அவர்களும் மற்றும் அரசு அலுவலர்களும் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

thirteen − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi