இந்த அறிவிப்புக்காக நீண்ட நாட்களாக காத்திருந்த சிங்கப்பூர் உணவக உரிமையாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காடுகளில் வாழும் பூச்சிகளை உணவாக பயன்படுத்தக் கூடாது என்றும் மாறாக பண்ணைகளில் வளர்க்கும் பூச்சிகள் மற்றும் இடக்குமதி செய்யப்பட்ட பூச்சிகளை மட்டுமே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ள. இந்த சூழலில் பூச்சிகளை கொண்டு சுவைமிகு உணவு தயாரித்து வாடிக்கையாளர்களை கவர சிங்கப்பூர் உணவகங்கள் தயாராகி விட்டன. இதற்கான சீனா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பூச்சி பண்ணைகளில் இருந்து பூச்சிகளை அவைகள் இறக்குமதி செய்ய உள்ளன. இந்த பூச்சி உணவுகளை மனிதற்களுக்கு மட்டுமல்லாது வீட்டு விலங்குகளுக்கும் கொடுக்கலாம் என்பது மற்றோரு செய்தி ஆகும்.