சிங்கம்புணரி : சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஒன்றியங்களில் அதிக அளவில் கடலை விவசாயம் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆடிப் பட்டத்தில் பொதுவாக கடலை விதைப்பு செய்து அறுவடை செய்வது வழக்கம்.தற்போது ஆனி மாதத்திலேயே விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை உழுது தயார் செய்து கடலை விதைக்கும் பணிகளில் மும்மரம் காட்டி வருகின்றனர்.
சிங்கம்புணரி பகுதியில் இரண்டு நாட்களாக மேகத்துடன் மழை சாரல் பெய்து வருகிறது. இதனால் பாரம்பரிய முறைப்படி சிங்கம்புணரி கோவில் காட்டில் ஏரில் மாடுகள் பூட்டி கடலை விதைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.