இருவரும் மாறி, மாறி முன்னிலைப் பெற்றனர். முடிவில் கரோலினா 22-20 என்ற புள்ளிக் கணக்கில் 3வது செட்டையும் வசப்படுத்தினார். அதனால் ஒரு மணி 8 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தில் சிந்து வெளியேற, கரோலினா 2-1 என்ற செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஒன்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய்(31வயது, 10வது ரேங்க்), ஜப்பானின் கென்டா நிஷிமோடோ(29வயது, 11வது ரேங்க்) ஆகியோர் களம் கண்டனர்.
அந்த ஆட்டத்திலும் நிஷிமோடோ 21-13, பிரணாய் 21-14 என்ற புள்ளிக்கணக்கில் ஆளுக்கொரு செட்டை வசப்படுத்தினர். அதனால் 3வது செட்டில் வெற்றிப் பெற 2 வீரர்களும் மல்லுக்கட்டினர். கடைசி செட்டின் ஆரம்பத்தில் பிரணாய் முன்னிலைப் பெற்றார். ஆனால் கடுமையாக போராடிய நிஷிமோடோ அந்த செட்டையும் 21-15 என தனதாக்கினார்.
அதனால் ஒரு மணி 18 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தை 1-2 என்ற செட்களில் பிரணாய் போராடி இழந்தார். முதல் சுற்றிலேயே பல இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தோல்வியை சந்தித்தனர். எஞ்சி சிந்து, பிரணாய் ஆகியோரும் நேற்று வெளியேற, சிங்கப்பூர் ஓபனில் இந்தியர்களின் ஆட்டம் 2வது சுற்றுடன் முடிந்தது.