சில்லி பாய்ன்ட்…

* சீனாவின் செங்டு நகரில் நடைபெறும் உலக பல்கலை. விளையாட்டு போட்டித் தொடரின் தொடக்க நாளான நேற்று இந்தியா 3 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியது. மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு போட்டியில் மானு பேக்கர், யாஷஸ்வினி தேஸ்வால், அபித்னியா பாட்டீல் ஆகியோர் அடங்கிய இந்திய அணி சீனா, ஈரான் அணிகளை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. மகளிர் தனிநபர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மானு பேக்கர், 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இளவேனில் வாளறிவன் தங்கம் வென்றனர்.
* ஐசிசி ஆண்கள் உலக கோப்பை டி20 தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா இணைந்து நடத்த உள்ள இந்த தொடருக்கான போட்டிகளை அமெரிக்காவின் புளோரிடா, மோரிஸ்வில்லி, டாலஸ், நியூ யார்க் நகரங்களில் நடத்துவது குறித்து பரிசீலிப்பதாக ஐசிசி குழு தெரிவித்துள்ளது.
* நினைவாற்றல் குறைபாடு நோயாளிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஆஷஸ் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி வீரர்கள் நேற்று தங்களின் ஜெர்சிகளை மாற்றி அணிந்து களமிறங்கினர்.

Related posts

வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு

ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது எம்பாம்வேயின் பிரான்ஸ் அணி!

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்