டெல்லி: மோடி அரசும் பாஜகவும் மாநிலத்தின் நுட்பமான சமூக அமைப்பை அழித்து ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் பெருங்குற்றமாக மாற்றியுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவிதுள்ளார். உங்கள் மௌனத்தை இந்தியா ஒருபோதும் மன்னிக்காது. நீங்கள் மணிப்பூரைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசி, மத்தியிலும் மாநிலத்திலும் உங்கள் இரட்டை இயலாமைக்கு மற்றவர்களைக் குற்றம் சொல்லாமல், என்ன நடந்தது என்பதை நாட்டுக்கு எடுத்துரைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டிவிட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளார்.