அதே நேரத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்த சம்பவங்கள் நடந்ததா எனவும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நேபாளத்தில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரிய அளவில் உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட மறுநாளே சிக்கிம் மாநிலத்தில் லோநாக் ஏரி பகுதியில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கனமழை கொட்டத் தொடங்கியது. சில மணி நேரம் நீடித்த கனமழை காரணமாக லாசென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் சுங்தாங் அணையும் உடைந்தது. மேகவெடிப்பினால் ஏற்பட்ட கனமழை, வெள்ளப்பெருக்கில் சிக்கி 40 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 22 ராணுவ வீரர்கள் உட்பட 120 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமாகி உள்ளனர்.