சென்னை: தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற எஸ்.ஐ. தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அடுத்தடுத்த எண்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். தேர்வு அறைகளில் முறைகேடுகள் அதிகளவு நடந்திருக்கலாம் என தேர்வர்கள் குற்றச்சாட்டு. ஏற்கெனவே தி.மலையில் தேர்வு எழுத செல்போன் மூலம் வினாத்தாளை புகைப்படம் எடுத்து அனுப்பிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.