இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளியே வந்த அவர் சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் கையெழுத்திட்டடார். அதே நாளில் பல்கலைக்கழகப் பொறுப்புப் பதிவாளராக வேதியியல் துறை பேராசிரியர் விஸ்வநாதமூர்த்தி என்பவரையும் நியமித்தார். விஸ்வநாதமூர்த்தி ஏற்கனவே பெரியார் பல்கலைக்கழகப் பொறுப்பு பதிவாளராக (செப்டம்பர் 3ம் தேதி) இருந்தபோது தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பூட்டர் பவுண்டேசன் சார்பில் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதேபோல், பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் அலுவலகத்தில் பிரிவு அலுவலராக பணியாற்றி வரும் விஷ்ணுமூர்த்தி என்பவர், துணை வேந்தர் ஜெகநாதனுக்கும், பதிவாளர் தங்கவேலுக்கும் மூலக்கருவியாக இருந்து அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்.
குறிப்பாக ஜெகநாதன், கடந்த 27ம் தேதி சூரமங்கலம் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு கையெழுத்திட சென்ற போது, விஷ்ணுமூர்த்தியும் சென்றுள்ளார். இது அரசுப் பணியாளர் நடத்தை விதிகளுக்குப் புறம்பானது. இதேபோல், அவரது மனைவியும் பூட்டர் பவுண்டேசன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். எனவே விஷ்ணுமூர்த்தி மற்றும் அவரின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும். மேலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.