சென்னை: நீட் ரத்து செய்யக் கோரி திமுக சார்பிலான கையெழுத்து இயக்கத்தில் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறுவதாக முறையீடு செய்யப்பட்டிருந்தது. தாமாக முன்வந்து, பொதுநல வழக்காக விசாரிக்க கோரிய தேசிய மக்கள் கட்சி தலைவரும், வழக்கறிஞருமான ரவி முறையீடு செய்திருந்தார். தாமாக முன்வந்து அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். பரதசக்கரவர்த்தி, லட்சுமி நாராயணன் ஆகியோர் தலைமை நீதிபதி அமர்வில் அடுத்த வாரம் முறையிட அறிவுறுத்தியுள்ளார்.