திண்டிவனத்தில் வீட்டின் பக்கவாட்டு கூரையை பிரித்து ₹60 ஆயிரம், 3 பவுன் செயின் திருட்டு

*போலீசார் விசாரணை

திண்டிவனம் : திண்டிவனத்தில் வீட்டின் பக்கவாட்டு கூரையை பிரித்து ரூ.60 ஆயிரம் பணம், 3 பவுன் செயினை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திண்டிவனம் கல்லூரி சாலை, மாரி செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மனைவி மீனா (48). இவர், தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி வந்ததாக தெரிய வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை வீட்டுக்கு வந்த மீனா, வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 60 ஆயிரம் ரூபாய் பணம், 3 பவுன் செயின் ஆகியவை திருடு போயிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டின் பக்கவாட்டில் கீற்றால் கட்டப்பட்ட தட்டியை பிரித்து அதன் வழியாக மர்ம நபர்கள் வந்து சென்றுள்ளதும் தெரியவந்தது.

இதுகுறித்து ரோசணை காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. உதவி ஆய்வாளர் சசிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி