நெல்லை: நெல்லை மாவட்டம் தாழையூத்து அரசு உதவிபெறும் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவரின் பையில் இருந்து அரிவாள் பறிமுதல் செய்தனர். ஆசிரியர் சோதனை செய்த போது பையில் அரிவாள் இருந்தது கண்டுபிடித்துள்ளனர். சக மாணவனுடன் தகராறு ஏற்பட்ட நிலையில், அரிவாளை எடுத்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறை விசாரணைக்குப் பின், அரிவாள் எடுத்து வந்த மாணவன் உட்பட 3 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்