இதை தாங்க முடியாத சரத், மேல்பாடி காவல் நிலையம் முன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உதவி ஆய்வாளருக்கு எதிராக வன்கொடுமை தடைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பின் இந்த வழக்கு கைவிடப்பட்டது. இந்நிலையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், வன்கொடுமை தடைச் சட்டப்படி முழு இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி சரத்தின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், உயிரிழந்த சரத்தின் தாய்க்கு 12 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் கருணைத்தொகையை பெற உரிமை உள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் போக மீதமுள்ள 10 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை 4 வாரங்களில் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.