இதை உண்மை என நம்பிய தோழியும், கங்காதேவியை தங்க அனுமதி அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அங்கு தங்கிய கங்காதேவி, தோழி வீட்டில் இருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார். இதே போல் மற்றொரு தோழியின் வீட்டிற்கும் சென்று கங்காதேவி கைவரிசை காட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வழக்கம்போல் கங்காதேவி போலீஸ் சீருடையில் தூத்துக்குடி பகுதிகளில் நேற்று சுற்றித்திரிவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்துசென்ற போலீசார், கங்காதேவியை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் வேறு யாரிடம் எல்லாம் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.