உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி தோல்வியை தழுவியது ஏமாற்றத்திற்குரியது :அஷ்வின் ட்வீட்

லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணியின் தோல்விக்கு பிறகு இந்திய வீரரும் உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணியை 209 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா, முதன்முறையாக உலக டெஸ்ட் சாம்பியனாக முடிசூடியது.கதாயுதம்’ வடிவிலான கோப்பை மற்றும் முதல் பரிசாக ₹13.22 கோடியை தட்டிச் சென்றது. பைனலில் தோற்று 2வது இடம் பிடித்த இந்தியா ₹6.60 கோடியுடன் திருப்தி அடைந்தது. ஐசிசி உலக கோப்பை தொடர்களில் பட்டம் வெல்லும் வாய்ப்பை, இந்திய அணி தொடர்ச்சியாக வீணடித்து வருவது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றமடைய வைத்துள்ளது.

இந்த நிலையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலரும், இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளருமான ரவிச்சந்திரன் அஷ்வின் தனது சமூக வலைதளத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த டிவீட்டில் “இந்திய அணி குறித்து தற்போது பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும், கடந்த 2 ஆண்டுகள் எனது சக வீரர்கள் சிறப்பாக | விளையாடியதன் விளைவாகவே, நாங்கள் இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும்; இந்திய அணி தோல்வியை தழுவியது ஏமாற்றத்திற்குரியது. சிறப்பாக விளையாடி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எனது வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு