இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், ஆவலூர்பேட்டை, திரவுபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த இவர், பள்ளிக்கரணை பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்துள்ளார். அப்போது, கடை ஷட்டர் பூட்டுகளை எப்படி உடைத்து திருடுவது என்பது குறித்து யூடியூப் வீடியோக்களை பார்த்து கற்றுக்கொண்டு, இரவில் தொடர் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.இவர் மீது திருவள்ளூர், திருமுல்லைவாயல், ஆவடி, டேங்க் பேக்டரி, சேத்துப்பட்டு ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. இதை தொடர்ந்து, மதன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.