திருச்சி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். ரங்கா ரங்கா கோபுரத்திற்கு முன்பு கோயில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். ரங்கநாதர், சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். ரங்கநாதர் கோயில் மண்டபத்தில் தமிழறிஞர்கள் பாடும் கம்பராமாயணத்தை பிரதமர் மோடி கேட்டார்.