குட்டையில் குதித்து போலீஸ்காரர் தற்கொலை

வேட்டவலம்: திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை சேர்ந்தவர் பிரசாந்த்(28). சென்னை பூந்தமல்லி, வெள்ளவேடு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். கவுரி(27) என்ற மனைவியும், தமிழ் அமுதன் (2) என்ற மகனும் உள்ளனர். இவருக்கு கடன் தொல்லை மற்றும் குடும்ப பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை பிரசாந்த் வீட்டின் அருகே ஆணைக்கட்டு சாவடி பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கல்குவாரியில் இறங்கி பிரசாந்தின் சடலத்தை மீட்டனர்.

Related posts

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து 14.5 லட்சம் கொள்ளை!

சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி

ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய 200 சதுர அடி நிலம் ஒதுக்க தயார்: அரசு!