கடைகளில் திருடிய 2 வாலிபர்கள் கைது: 3 பைக்குகள் பறிமுதல்

திருப்போரூர்: கேளம்பாக்கத்தில் கடைகளில் பூட்டை உடைத்து பணத்தை திருடிய 2 பேரை கைது செய்து, 3 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.கிழக்கு கடற்கரை சாலை, கோவளத்தில் உள்ள அஸ்வினி ஸ்டோர்ஸ் என்ற கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த 10 ஆயிரம் ரூபாயும், கேளம்பாக்கத்தில் மஜீத் நகர் அருகே உள்ள சுடலை மணிக்கண்ணன் என்பவரது பெட்டிக்கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த 1000 ரூபாயும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து, வழக்குபதிவு செய்த கேளம்பாக்கம் போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு ஆய்வு செய்தனர். இதில், கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த பிரதீப்ராஜ் (24), பொற்செல்வன் (19) ஆகிய 2 பேரும், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.கேளம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் நாஞ்சில்குமார் உத்தரவின்பேரில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 3 திருட்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும், கைதான 2 பேர் மீது வழக்குபதிவு செய்து, அவர்களை திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

மன்மத ராசா.. மன்மத ராசா.. கன்னி மனச கிள்ளாதே… பிரபல மேட்ரிமோனியல் மூலமாக 50 பெண்களை வீழ்த்திய மன்மதன்

நிலைக்குழு தேர்தலில் கவுன்சிலர்களை இழுக்க பாஜ ரூ.2 கோடி பேரம்

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை