பென்சில்வேனியாவில் பரப்புரை செய்து கொண்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பாதுகாப்புப்படை சுட்டுக்கொன்றது. காதில் காயமடைந்த ட்ரம்ப் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் ஒபாமா ஆகியோர் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றது சிறப்பு பாதுகாப்புப் படை; காதில் காயம் ஏற்படவே பாதுகாப்பு படையினரால் பத்திரமாக டிரம்பை மீட்டுச்செல்லப்பட்டார்.