இந்த சம்பவம் பற்றி மாநகர எஸ்பி ஓம் பிரகாஷ் மிஸ்ரா,‘‘சம்பவத்துக்கு பின்னர் லோகேஷ் தப்பி ஓடிவிட்டார். அந்த பெண் புகார் அளித்ததை தொடர்ந்து லோகேஷ் கைது செய்யப்பட்டார்.
பலாத்கார சம்பவத்தை 3 அல்லது 4 பேர் வீடியோ எடுத்து இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இதை தடுக்காமல் வீடியோ எடுத்த அந்த நபர்களை தேடி வருகிறோம்’’ என்றார். புனித நகருக்கு இழுக்கு மபி மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. உஜ்ஜைனியில் பட்டபகலில் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜ அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மபி காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: புனித நகராம் உஜ்ஜைனியில் மீண்டும் ஒரு அறுவறுப்பான சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்காக ஆட்சியில் இருப்பவர்கள் வெட்கம் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் ராஜினாமா செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. மபி காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்த சம்பவம் உஜ்ஜைனியின் பெருமைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மபியில் தற்போது பலாத்கார சம்பவங்கள் பட்டப்பகலிலேயே நடக்கின்றன. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டால் தான் இது போன்ற நிகழ்வுகள் நடக்கும். அதுவும் முதல்வரின் சொந்த ஊரிலேயே நடந்துள்ளது என்றால் மாநிலத்தின் இதர பகுதிகளின் நிலைமையை ஒருவர் சிந்தித்து பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.