இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு தோவாளை மலர்சந்தையில் சிவனுக்கு உகந்த வில்வப்பூவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதேபோல் பிச்சி பூ, மல்லிகை பூ, அரளி பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.60 விற்கப்பட்ட வில்வப்பூ, இன்று ரூ.300க்கு விற்கப்படுகிறது. பிச்சி பூ ஒரு கிலோ ரூ.1000 முதல் ரூ.1,500 வரையும், மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.900 முதல் ரூ.1,250 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் அரளி பூ கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ. 280க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகரித்தாலும் மக்கள் போட்டி போட்டு கொண்டு பூக்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால் வியாபாரம் சிறப்பாக உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.