சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

ராமநாதபுரம், ஆக.29: திருஉத்தரகோசமங்கை மற்றும் ராமநாதபுரம், சாயல்குடி பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் சோமவார பிரதோஷ வழிபாடு நேற்று மாலையில் நடந்தது.சோமவார திங்கள் பிரதோஷத்தை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயிலுள்ள நந்தியம் பெருமானாருக்கு மஞ்சள், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு, திரவியப்பொடி, பால், சந்தனம், நெய், விபூதி உள்ளிட்ட 18 பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, தாழம்பூ சாற்றி பூஜைகள் நடந்தது. மாலையில் ரிஷப வாகன ஊர்வலம் கோயில் உள்பிரகாரத்தில் நடந்தது.

இதுபோன்று ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர், முகவை ஊரணி விசாலாட்சி உடனுரை காசி விஸ்வநாதர் கோயில், நயினார்கோயில் சவுந்தரநாயகி அம்மன் உடனுரை நாகநாதர், சாயல்குடி மீனாட்சி அம்மன் உடனுரை கைலாசநாதர், மாரியூர் பவளநிற வள்ளியம்மன் உடனுரை பூவேந்தியநாதர், ஆப்பனூர் குழாம்பிகை உடனுரை திருஆப்பநாதர், டி.எம்.கோட்டை கருணாகடாச்சி அம்மன் உடனுரை செஞ்சிடைநாதர், மங்களம் ரேணுகாம்பாள் உடனுரை ஆதிசிவன் உள்ளிட்ட சிவன் கோயில்களிலுள்ள நந்தியம் பெருமானாருக்கு மஞ்சள், பால், தேன், இளநீர் உள்ளிட்ட பலவகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன், வில்வ அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்