அந்த வீடியோவில் ஒரு வாலிபர் வெடிகுண்டை கோயில் மதில் சுவர் மீது வீசி வெடிக்க செய்துவிட்டு மகிழ்ச்சியாக திரும்பி செல்வதும், அதனை அங்கிருந்த மற்றவர்கள் பார்த்து பாராட்டுவது போல் வீடியோ பதிவில் இருந்தது. அதனை ஒருவர் எடிட் செய்து, அந்த வெடிகுண்டு வீசும் கும்பலுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த ஜெயில் வார்டன் ஒருவர் துணையாக இருப்பதாகவும், அதனால், போலீசார் அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோயில் மீது வெடிகுண்டு வீசிய வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இந்த வீடியோ அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பாகூர் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.