சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச் சோழன் சேர்ந்தார். இந்நிலையில் அவர் நெல்லை தொகுதி கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அவரை அழைத்து நேர்காணல் நடத்தியுள்ளர் எடப்பாடி பழனிசாமி. இது கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் சீனியர்கள் பலர் உள்ளனர். கட்சிக்காக பல கோடி ரூபாயை செலவு செய்துள்ளனர். அப்படி இருக்கும்போது அவர்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, சிம்லா முத்துச்சோழனுக்கு சீட் கொடுக்க திட்டமிட்டு அவரை தனியாக நேர்காணல் நடத்தியுள்ளார் என்று ஆதங்கத்துடன் கூறுகின்றனர் அதிமுகவினர்.