நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அவர் இன்னும் வங்கதேசத்தின் பிரதமராக இருக்கிறார்.பிரதமர் பதவியை அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்யாததால், இடைக்கால அரசாங்கத்திற்கு எதிராக அவரால் நீதிமன்றத்தில் முறையிட முடியும். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் பதவிக்காலம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இருப்பினும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் வங்காளதேசத்தில் தேர்தல் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். மீண்டும் அவாமி லீக் கட்சி ஆட்சிக்கு வரும். இல்லாவிட்டால் எதிர்க்கட்சியாகி விடுவோம். கடந்த காலத்தை மறந்து விடுவோம். பழிவாங்கும் அரசியல் செய்யக்கூடாது. வங்கதேசத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க பிஎன்பி கட்சியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்.
அவாமி லீக் கட்சியின் சார்பில், அடுத்த தேர்தலில் என்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கட்சியினர் கூறுகின்றனர். எனது தாயின் பதவிக் காலம் முடியும்போதே, அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார். கட்சி விரும்பினால், நான் தேர்தலில் போட்டியிடுவேன். என் தாயை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. அவர்களின் மிரட்லுக்கு என் தாய் பயப்படவில்லை. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் முயன்றனர். மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரியை பணி நீக்கம் செய்தோம். எங்களால் என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்துவிட்டோம். விரைவில் நாடு திரும்புவோம். எங்களை யாராலும் அழிக்க முடியாது. எங்கள் உதவி மற்றும் ஆதரவாளர்கள் இல்லாமல், வங்கதேசத்தில் நிலையான ஆட்சி அமையாது’ என்றார்.