இதுகுறித்து டாக்காவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முகமது யூனுஸ், “வங்கதேசத்துக்கும், இந்தியாவுக்கும் நல்ல நட்புறவு நீடிக்கிறது. இந்தியாவில் தஞ்சம் சென்றுள்ள ஹசீனா அங்கிருந்து கொண்டு அரசியல் விஷயங்களை பேசுவது யாருக்கும் ஏற்புடையதாக இல்லை. அது இந்தியா, வங்கதேச உறவை பாதிக்கும். ஷேக் ஹசீனா அரசின் அட்டூழியங்களுக்கு எதிராக வங்கதேச மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காக அவர் மீண்டும் வங்கதேசம் அழைத்து வரப்படுவார். வங்கதேசம் ஹசீனாவை திரும்ப அழைத்து வரும் வரை அவர் அமைதியாக இருக்க வேண்டும்” என எச்சரித்துள்ளார்.