தாக்கா : வங்கதேசத்தில் தேர்தல் அறிவித்தால் ஷேக் ஹசீனா தாயகம் திரும்புவார் என்று அவரது மகள் தகவல் அளித்துள்ளார். வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனிடையே வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்து அசாதாரண சூழல் நிலவும் நிலையில், இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நேற்று பொறுப்பேற்றார்.