ரூ.4000 கோடி மதிப்பிலான பங்குகள் வரும் 24ம் தேதி ஏலத்தின் மூலம் மறுவெளியீடு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு ரூ.4000 மதிப்பிற்கு பங்குகள் வரும் 24ம் தேதி ஏலத்தின் மூலம் மறுவெளியீடு செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.4000 கோடி மதிப்பிற்கு பங்குகள் வடிவிலான 7.03% தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2029, ரூ.1000 கோடி, 7.22% தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2054, ரூ.2000 கோடி மற்றும் 7.10% தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2034, ரூ.1000 கோடி ஏலத்தின் மூலம் மறுவெளியீடு செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் வரும் 24ம் தேதி நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் வரும் 24ம் தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

அக்டோபர் 27ல் தவெக மாநாடு: நடிகர் விஜய் அறிவிப்பு

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்

அரசு பஸ்கள் மூலம் பொருள் போக்குவரத்து சேவை வழங்க திட்டம்