Saturday, September 21, 2024
Home » ரூ.4000 கோடி மதிப்பிலான பங்குகள் வரும் 24ம் தேதி ஏலத்தின் மூலம் மறுவெளியீடு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ரூ.4000 கோடி மதிப்பிலான பங்குகள் வரும் 24ம் தேதி ஏலத்தின் மூலம் மறுவெளியீடு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

by Ranjith

சென்னை: தமிழ்நாடு அரசு ரூ.4000 மதிப்பிற்கு பங்குகள் வரும் 24ம் தேதி ஏலத்தின் மூலம் மறுவெளியீடு செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.4000 கோடி மதிப்பிற்கு பங்குகள் வடிவிலான 7.03% தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2029, ரூ.1000 கோடி, 7.22% தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2054, ரூ.2000 கோடி மற்றும் 7.10% தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2034, ரூ.1000 கோடி ஏலத்தின் மூலம் மறுவெளியீடு செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் வரும் 24ம் தேதி நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் வரும் 24ம் தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

4 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi