ஷேர் மார்க்கெட்டில் ரூ.5 லட்சம் இழந்தவர் தற்கொலை முயற்சி

பெரம்பூர்: கொடுங்கையூர் ஸ்ரீராம் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் மோகன் பவுல்ராஜ் (41). ஆன்லைன் டெலிவரி வேலை செய்து வருகிறார். இவருக்கு ரெபேகா என்ற மனைவியும், 2 வயதில் குழந்தையும் உள்ளது. மோகன் பவுல்ராஜ் நேற்று முன்தினம் நள்ளிரவு கொடுங்கையூர் ஜம்புலி தெருவில் கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த கொடுங்கையூர் போலீசார் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், ஷேர் மார்க்கெட்டில் ரூ.5 லட்சம் வரை நஷ்டம் மற்றும் கடன் தொல்லை காரணமாக தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

Related posts

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு உடனே ஒப்புதல் தர வேண்டும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்தார்; ஒருமனதாக நிறைவேறியது

நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: ராகுல், கார்கே பேசும் போது மைக் அணைக்கப்பட்டதால் அதிர்ச்சி

தலைநகரில் கொட்டித் தீர்த்த கனமழை டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்தது: பயணிகளுடன் நின்றிருந்த கார்கள் நொறுங்கின; உடல் நசுங்கி ஒருவர் பலி 7 பேர் படுகாயம்