கூடுதல் தலைமைச் செயலாளர்- நிதி, முதன்மை செயலாளர்-உணவு மற்றும் பொது விநியோகம் உள்பட பல்வேறு பதவிகளை வகித்தார். சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றியவர். பாரதிதாசன் நிர்வாகவியல் பயிற்சி நிலையத்தின் இயக்குனர் அசித் பர்மா கூறுகையில், ‘‘ சண்முகத்தின் வருகை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரிதும் பயனளிக்கும். சண்முகம் பயிற்சி நிலையத்தின் நிர்வாகக் குழுவில் இணைந்துள்ளதால், திறன் மேம்பாட்டிற்காக, குறிப்பாக நமது மாநிலத்திற்கான பல நீடித்த மற்றும் பொதுக் கொள்கை திட்டங்களை தொடங்க பாரதிதாசன் நிர்வாகவியல் பயிற்சி நிலையம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.